வவுனியா பிரதேச செயலக பிரிவில் 45 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!!

1667

வாழ்வாதார உதவிகள்..

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 45 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (28.02.2022) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கினைப்புக்குழு தலைவருமான குலசிங்கம் திலீபனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 45 குடும்பங்களுக்கு,

தையல் இயந்திரம், ஆடு கோழி வளர்ப்பிற்கான பணம், விவசாயத்திற்காக மோட்டர் மற்றும் வேலி முள்ளுக்கம்பி, சமையல் உபகரணங்கள், சலூன் உபகரணங்கள் , பிரிண்டர் , வாகன திருத்தும் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன், வவுனியா மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் பத்மரஞ்சன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள் உட்பட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.