கொலை குற்றம் சாட்டப்பட்ட 9 மாத குழந்தை விடுவிப்பு!!

304

boy

பாகிஸ்தானில் பொலிஸ் அதிகாரியை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 9 மாத குழந்தை விடுவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் கடந்த சில நாட்களுக்கு முன், அடிப்படை தேவைகளை வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது பொது மக்களுக்கும், பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் பொலிசாரை கொலை செய்ய முயற்சித்ததாக 25 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது, இந்த 25 பேரில் 9 மாத குழந்தையும் அடங்கும்.

பொதுமக்களில் அகமது என்பவர் தனது 9 மாத குழந்தை மூசா கான் உடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார், இதனால் தந்தை, மகன் இருவர் மீதும் பொலிசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ரபாஹாத் அலி 9 மாத குழந்தையின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் இருந்து நீக்க உத்தரவிட்டு உள்ளார்.

இச்சம்பவத்தில் குழப்பம் நடந்துள்ளதாகத் தெரிவித்த காவல்துறை அதிகாரி ரானா ஜப்பார், இந்தத் தவறுக்காக சப்- இன்ஸ்பெக்டர் ஒருவரை பணி நீக்கம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.