வவுனியாவில் புல்வெட்டும் இயந்திரத்திற்குள் அகப்பட்டு கடற்படை வீரர் ஒருவர் மரணம்!!

2607

புல்வெட்டும் இயந்திரத்திற்குள்..

புல்வெட்டும் இயந்திரத்திற்குள் அகப்பட்டு வவுனியாவில் கடற்படை வீரர் ஒருவர் (03.03.2022) மரணமடைந்துள்ளார். பூனாவ இராணுவ முகாமில் புல்வெட்டும் இயந்திரம் மூலம்,

துப்பரவுப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அதனுள் அகப்பட்டு காயமடைந்த கடற்படை சிப்பாய் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.