வவுனியாவில் அநாதரவாக நின்ற முதியவர் : அடைக்கலம் வழங்கிய ஊடகவியலாளர்கள், கிராம சேவையாளர்!!

1798

அநாதரவாக நின்ற முதியவர்..

வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் சுகயீனமுற்ற நிலையில் அநாதரவாக நின்ற 80 வயது மதிக்கத்தக்க முதியவரை ஊடகவியலாளர்களுடன் கிராம சேவையாளர் இணைந்து காப்பாற்றி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சற்று மனநலம் பாதிப்படைந்த முதியவர் வீதியில் செல்லும் வாகனங்களில் விபத்துக்குள்ளாகும் வகையில் வீதியில் நடமாடிக்கொண்டிருந்தார்.

இதனை அவதானித்த கிராம சேவையாளர் ப.பிரதீப் ஊடகவியலாளர்களுக்கு தகவல் வழங்கியிருந்தார். அதன் பின்னர் அவ்விடத்திற்கு விரைந்த ஊடகவியலாளர்களான வசந்தன், கதீஷன் ஆகியோர் முதியவரின் கதைத்த போது அவர் ஊர்களின் பெயரையே தனது பெயராக தெரிவித்துடன் சுகயீனமுற்ற நிலையிலும் காணப்பட்டார்.

எனினும் முதியவரை இவ்விடத்தில் விட்டு சென்றால் வீதி விபத்துக்குள்ளாகுவார் என்ற அச்சத்திலும் அவரின் உடல்நிலமையினை கருத்தில் கொண்டு 1990 அவசர அன்புலன்ஸ் சேவையினை வரவழைத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் குறித்த முதியவர் தொடர்பில் எவ்வித தகவலும் தெரியாத நிலையில் அவரை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.