வவுனியா ரொக்கற் விளையாட்டு கழகத்தின் 35 ஆவது வருட பிரமாண்ட விளையாட்டு விழாவும் இன்னிசை இரவும்!!(படங்கள்)

336

கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அனுசரணையில் வவுனியா ரொக்கற் விளையாட்டு கழகத்தின் 35 ஆவது வருட விளையாட்டு விழாவும் இன்னிசை இரவும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவில்குளம் இந்துக்கல்லூரியின் இசை வாத்திய ஊர்வலத்துடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.

இவ் நிகழ்வுகள் ரொக்கற் விளையாட்டு கழகத்தின் தலைவர் திருசெ.தவச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவரும், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய யாழ் மாவட்ட வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக வவுனியா நகர சபையின் முன்னாள் நகர பிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான திரு.லிங்கநாதன் அவர்களும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் அவர்களும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் வன்னி பிராந்திய அமைப்பாளர் திரு.க.சிவநேசன் (பவன்) அவர்களும் கலந்து நிகழ்வுகளை
சிறப்பித்தார்கள்.

கௌரவ விருந்தினர்களாக வவுனியா நகரசபையின் செயலாளர் திரு கே .சத்தியசீலன் மற்றும் ரொக்கற் விளையாட்டு கழகத்தின் போசகரும், இலங்கை திருச்சபை தமிழ் வித்தியாலய முன்னாள் அதிபர் திரு. சி.வையாபுரிநாதன் அவர்களும் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தார்கள்.

நிகழ்வில் பிரதம விருந்தினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றும் போது என்னை இவ் விழாவிற்கு அழைப்பதற்கு எமது அமைப்பின் மோகன் ஊடாக தொடர்பு கொண்ட போது மிகவும் பெருமைகொண்டேன் ஏனெனில் இக் கல்லூரியை சுற்றியுள்ள கிராமங்கள் அங்குள்ள மக்கள் எம்மோடு உரமாக பழகிய காலங்களை நான் என்றும் மறப்பதில்லை. இவ் நிகழ்வின் ஊடாக மக்களை சந்திப்பதையிட்டு பெருமிதம் கொள்கிறேன் என்றும் கூறினார்.

இரவு நிகழ்வாக வவுனியா ஜெயந்தனின் இராகஸ்வரம் இன்னிசை இரவு கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகர் திரு.க.சந்திரகுலசிங்கம் அவர்களின் அனுசரணையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் சிறார்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15