வவுனியாவில் விளையாட்டு மைதானத்திற்குள் புகுந்தவர்கள் வீரர்கள் மீது தாக்குதல் : இருவர் வைத்தியசாலையில்!!

2446

பட்டானிச்சூர்..

வவுனியா உதைப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் அணிக்கு 11 பேர் கொண்ட விலகல் முறையிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி பட்டானிச்சூர் அஸ்ரப் விளையாட்டு மைதானத்திற்குள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினமும் (13.03.2022) மதியம் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் மைதானத்தினுள் புகுந்த பட்டானிச்சூர் மற்றொரு கழகத்தினை சேர்ந்தவர்கள் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு இடையூறு விளைவித்திருந்ததுடன் இரு வீரர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இவ் தாக்குதலில் காயமடைந்த இரு வீரர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது அசமந்த போக்காக செயற்படுவதாக பாதிக்கப்பட்ட வீரர்ரகள் தெரிவித்தனர்.