வவுனியா பாவற்குளம் படிவம்-3 கனிஸ்ட உயர்தர வித்தியாலயம் வரலாற்று சாதனை!!

2080

புலமைப்பரிசில் பரிட்சை பெறுகள்..

புலமைப்பரிசில் பரிட்சை பெறுகள் நேற்று மாலை வெளியாகிய நிலையில் வவுனியா செட்டிக்குளம் கோட்ட வலயத்தில் இம்முறையும் பாவற்குளம் படிவம்-3 கனிஸ்ட உயர்தர வித்தியாலயம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

2021ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 17 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்ததுடன் 07 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். செட்டிகுள கோட்டத்தில் கூடிய தொகை வெட்டுபுள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட பாடசாலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஜ.சன்சிகன் 166 புள்ளிகளையும் , வ.சபிதா 165 புள்ளிகளையும், ம.ரெஜினோல்ட் 163 புள்ளிகளையும் , ஈ.கொன்ஸ்ரன் 162 புள்ளிகளையும், ர.தரணிகா 161 புள்ளிகளையும், கி.பவிசனா 155 புள்ளிகளையும் , ஜோ.ஜொய்சியா 151 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த வருடமும் வெட்டு புள்ளிகளுக்கு மேல் 05 மாணவர்கள் பெற்று செட்டிகுள கோட்டத்தில் கூடிய தொகை வெட்டுபுள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட பாடசாலையாக திகழ்ந்திருந்தது.