புதுக்குடியிருப்பில் பாரதிமைந்தனின் சயனம் மறந்த பொழுதுகள் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா!!

901

கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா..

பாரதி மைந்ததனின் சயனம் மறந்த பொழுதுகள் கவிதைத் தொகுப்பு வெளியிட்டு விழா புதுக்குடிருப்பு பாரதிதாசன் சனசமூக நிலையத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.

மலர்ச்செண்டுகள் கொடுக்கப்பட்டு பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட்டதுடன் இறைவாழ்த்து, மங்களவிளக்கேற்றல், வரவேற்புரை, சிறுமிகள் நடனம், விருந்தினர் உரை, வாழ்த்துரை என்பவற்றுடன் நூல் வெளியிடு இடம்பெற்றது. நூலின் ஆய்வுரையினை லதா கந்தையா வழங்கியிருந்தார்.

பாரதிதாசன் சனசமூக நிலையத்தின் தலைவர் க.றாகுலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்த் மற்றும் சிறப்பு அதிதியாக வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன்,

கிராம அலுவலகர் தி.உமாஜிதன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ரூ.கல்யாணி, திரைப்பட இயக்குனர் சுதர்சன் ரெட்ணம், பூநகரி அபிவிருத்தி உத்தியோகத்தர் நிவேதா நிவேதிகா மற்றும் கௌரவ அதிதியாக வவுனியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீஷன்,

ஆசிரியர் சிவகரன் , அழகுக்கலை கலைஞர் ஜெயவாணி, கவிஞர் ராதை குபேரன், கவிஞர் அபிவர்ணா மற்றும் விருந்தினர்களாக அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பாரதி மைந்தன் இன் சயனம் மறந்த பொழுதுகள் கவிதை நூல் வெளியீட்டில் கிழமையில் ஒருநாள் தண்ணீர் ஊற்றி வளர்க்க கூடிய கக்கிரஸ் அழகுத் தாவரம் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.