வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலய வாயிலுக்கு முன்பாகவிருந்த மரத்தில் தீப்பரவல்!!

1614

மரத்தில் தீ..

வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயம் வாயிலுக்கு முன்பாகவிருந்த மரத்தில் நேற்று இரவு 9 மணியளவில் தீப்பரவல் இடம்பெற்றதுடன் பல மணிநேர போராட்டத்தின் மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

பாடசாலை வாயிலுக்கு முன்பாகவிருந்த மரத்தில் இரவு 9 மணியளவில் தீடிரேன தீப்பற்றியேறிந்துள்ளது.

இதனை அவதானித்த ஆசிரியர்கள் மற்றும் அயலவர்கள் உடனடியாக இராணுவம், பொலிஸார், தீயணைப்பு பிரிவினர் ஆகியோருக்கு தகவல் வழங்கியதுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் அங்கிருந்தவர்கள் ஈடுபட்டனர்

எனினும் வவுனியா நகரிலிருந்து தீயணைப்பு வாகனம் வருகை தருவதற்கு முன்னரே அங்கிருந்தவர்களின் முயற்சியினால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது .

மரத்தில் தீப்பரவல் தொடர்ந்து நீடித்திருந்தால் மரம் முறிந்து பாடசாலையின் ஆய்வு கூட கட்டிடத்தின் மீது வீழ்ந்து பாரிய சேதங்களை உருவாகியிருக்கும்

எனினும் மரத்தின் மீதான தீப்பரவலுக்கான காரணம் கண்டறிப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.