வவுனியா ஓமந்தை இராணுவச் சாவடியில் 8 கிலோ 75 கிராம் கேரள கஞ்சாவுடன் பெண் உட்பட மூவர் கைது!!

2484

கஞ்சா..

வவுனியா ஓமந்தை இராணுவ சாவடியில் வாகனத்தில் 8 கிலாே 75 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் பெண் உட்பட மூவர் இன்று (16.03.2022) காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓமந்தை இராணுவ சாவடியில் சந்தேகத்திடமான முறையில் பயணித்த அட்டோ ரக வாகனத்தினை மறித்து சோதனைக்குட்படுத்திய சமயத்தில் வாகனத்தின் பிற்பகுதியில் கேரள கஞ்சாவினை கைப்பற்றினர்.

அதன் பின்னர் தொடர்ச்சியான சோதனையின் போது வாகனத்தின் ஆசனங்களின் கீழ்பகுதி போன்றவற்றிலிருந்து நான்கு கேரள கஞ்சா பொதிகள் மீட்க்கப்பட்டன.

இதனையடுத்து வாகனத்தில் பயணித்த மாகாநுவர , மேல்சிறிபுர , கசலக பகுதியினை சேர்ந்த பெண் உட்பட மூவரை இராணுவத்தினர் கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் , கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா , சந்தேக நபர்கள் ஆகியோரை ஓமந்தை பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் யாழ்ப்பாணத்திலிருந்து குருநாகல் நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளமையுடன்,

மேலதிக விசாரணைகளின் பின்னர் சான்று பொருட்கள் மற்றும் சந்தேகநபர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குறிய நடவடிக்கைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.