வவுனியா மூத்த ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள் நூல் அறிமுக விழா!!

1367

நூல் அறிமுக விழா..

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் ‘கருவி’ மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பும் இணைந்து நடத்திய – ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள் நூல் அறிமுக விழா யாழ் நாச்சிமார் கோவில் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வினை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் வீரகேசரி இதழின் பிரதம ஆசிரியருமாகிய எஸ். ஸ்ரீகஜன் தலைமை தாங்கியதுடன் ஊடகவியலாளரும் எழுத்தாளருமாகிய ஷர்மிளா வினோதினி நிகழ்வுகளை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்காகச் செயற்பட்டு வருகின்ற கருவி அமைப்பின் தலைவர் க. தர்மசேகரம் வரவேற்புரையாற்றினார். நிகழ்வின் தலைவர் ஸ்ரீ கஜன் தலைமை உரையாற்றினார். எங்கட புத்தகங்கள் சஞ்சிகையின் ஆசிரியரும் அந்த நிறுவனத்தின் நிறுவனருமாகிய குலசிங்கம் வசீகரன் வாழ்த்துரை வழங்கியிருந்தனர்.

ஊடகவியலாளர் யாழ். தர்மினி பத்மநாதன் நூலை அறிமுகம் செய்து உரையாற்றியிருந்தமையுடன் வண்ணை காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தின் உப தலைவர் செல்லத்துரை திருமூர்த்தி நூலின் சிறப்புப் பிரதியை நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் உளவியல் மருத்துவ நிபுணர் சு.சிவதாஸ் தனது துறைசார்ந்த நிலையில் மாற்றத்தை நாடும் மாற்றுத்திறானளிகள் நூல் பற்றிய பார்வையைத் தனது உரையில் செலுத்தியிருந்தார்.

யாழ் பல்கைலக்கழக சமூகவியல்துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் இரா.இரோஜஸ்கண்ணன் இந்நூலின் சமூகவியல் முக்கியத்துவம் குறித்து கருத்துரையாற்றினார். நூலாசிரியரின் ஏற்புரையைத் தொடர்ந்து சிரேஸ்ட ஊடவியலாளர் கணபதி சர்வானந்தா நன்றியுரையாற்றினார்.

விழா ஏற்பாட்டாளர்களின் சார்பில் கல்வியலாளர்களும் முக்கியஸ்தர்களும், தமிழ் ஊடகவியாலாளர் ஒன்றியத்தின் சார்பில் எஸ். ஸ்ரீ கஜன் மற்றும் யாழ் ஈழுநாடு இதழின் ஆசிரியர் இராசநாயகம் பாரதி ஆகியோரும் நூலாசிரியரையும் அவரது துணைவியாரையும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் உரையாற்றியவர்களுக்கு நூலாசிரியரினால் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டதுடன் பல்கலைக்கழகக் கல்வியலாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என பல்துறை சார்ந்தவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த வருடத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினமாகிய டிசம்பர் 3 ஆம் திகதி மன்னார் மாந்தை மேற்கு மாற்றுத்தினாளிகள் அமைப்பினரால் அதன் பணிப்பாளர் வெற்றிச்செல்வி சந்திரகலாவின் தலைமையில் மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள் நூல் வெளியீடு செய்யப்பட்டது என்பதும் அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கருவி அமைப்பின் முக்கிய பங்களிப்புடன் அந்நூலின் அறிமுக விழா நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.