அகதிகளாக..

இலங்கையிலிருந்து ஆறு பேர் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு,

அருகே உள்ள மணல் திட்டில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஆணும், 2 பெண்களும், 3 குழந்தைகளுமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இந்தியக் கடலோர காவல் படையினர் மீட்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.




