வவுனியா நகரில் மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு பெறுவதற்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்!!

1913

மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு..

நாட்டின் பல மாவட்டங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கான தட்டுப்பாடு தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் இவற்றிக்காக இன்றும் மக்கள் நீண்ட மணிநேரமாக வரிசையில் காத்திருந்தனர்.

வவுனியா மாவட்டத்தின் பல எரிபொருள் நிலையங்களில் மண்ணெண்ணெய் நிறைவடைந்துள்ள போதிலும் மாவட்டத்தின் இரு எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்களில் ஒரு நபருக்கு 1000 ரூபாவிற்கு என்ற அடிப்படையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகின்றன. இதனையடுத்து மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்

மேலும் எரிவாயு லிட்ரோ சிலிண்டரை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே வழங்கப்படுவதுடன் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிவாயு முகவரினால் இன்று 40 டோக்கன்கள் வழங்கப்பட்டு அதிகாலை 4.30மணி தொடக்கம் மக்கள் காத்திருந்து காலை 10.30 மணியளவில் எரிவாயுவினை பெற்றிருந்தனர்.