நீண்ட வரிசையில் மக்கள்..

லங்கா ஜ.ஓ.சி நிறுவனத்தில் அனைத்து ரக பெற்றோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமையினையடுத்து வவுனியா மாவட்டத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களினை மக்கள் நாடிவருகின்றமை அதிகரித்துள்ளது.

லங்கா ஜ.ஓ.சி நிறுவனத்தில் ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 303 ரூபா என்பதுடன் ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 332 ரூபாவாக நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அதிகரித்தது.

எனினும் இதுவரையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.

இதனையடுத்து மாவட்டத்தில் பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக, மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக, வேப்பங்குளம் 8ம் ஒழுங்கை அருகில், ஹோரவப்பொத்தானை வீதியிலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையத்தினை மக்கள் நாடி வருகின்றனர்.

மக்களின் நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டனர்.





