வவுனியாவில் பல லட்சம் பெறுமதியான 18 முதிரை மரக்குற்றிகள் மீட்பு : ஒருவர் கைது!!

1689

முதிரை மரக்குற்றிகள் மீட்பு..

வவுனியா பண்டாரிக்குளம் காவல் அரண் பிரிவுக்குட்பட்ட கூமாங்குளம் பகுதியில் நேற்றையதினம் (28.03.2022) மாலை 18 முதிரை மரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் ஓர் பராமரிப்பற்ற காணியில் முதிரைக்குற்றிகள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பண்டாரிக்குளம் காவல் அரண் பொறுப்பதிகாரி திலகரத்ன தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் அதனை மீட்டுள்ளதுடன் கூமாங்குளம் பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

18 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றின் சந்தைப்பெறுமதி 10 லட்சம் ரூபாவிற்கு மேல் எனவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சான்றுபொருட்கள் மற்றும் சந்தேகநபரை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.