வவுனியாவில் ”கோத்தா மகிந்த அரசே எம்மை கொல்லாதே” என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்!!

2820

கவனயீர்ப்பு போராட்டம்..

கோத்தா – மகிந்தவின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக என தெரிவித்து வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (31.03.2022) காலை 10.00 மணியளவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

கோத்தா மகிந்த அரசே எம்மை கொல்லாதே, விலை உயர்த்தி சாவடிக்காதே, நாட்டு மக்களை ஏமாற்றி பிழைக்காதே, சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை விற்காதே, மீண்டும் மீண்டும் கடன் வாங்கி எங்களை அடைவு வைக்காதே, தள்ளாதே தள்ளாதே பட்டினி சாவில் தள்ளாதே போன்ற பல கோசகங்களை எழுப்பியவாறும்,

விலை உயர்வினை தடுத்து நிறுத்து, கட்டுப்பாட்டு விலையினை கொண்டு வா, உழைக்கும் மக்களை பட்டினிச்சாவுக்குள் தள்ளாதே , தாராள மயம் தனியார் மயம் தந்த பரிசுகளே இன்றைய அவலநிலை, என்ன வளம் இல்லை இந்த நாட்டில் ஏன் கை ஏந்த வேண்டும் அந்நிய நாட்டில்,

அரசியலமைப்பை மாற்ற வேண்டும் தேசிய பொருளாதாரம் உருவாக வேண்டும் , நேற்று அங்கர் 980ரூபா இன்று 1900ரூபாவிற்கும் இல்லை, கோதுமை மா நேற்று 85ரூபா இன்று 190ரூபாவிற்கும் இல்லை, கடனுக்குள் தள்ளியோர் உல்லாசவாழ்வு, நாட்டு மக்கள் பட்டினி சாவு போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிவாறு சிலிண்டர், மின்சாரம் , அடுப்பு , மண்ணெண்ணெய், போன்றவைக்கு தற்போதும் வரிசையில் ஆனால் அவைகள் இல்லை என்பதை சித்தரிக்கும் வகையில் குறித்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் குறித்த போராட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றிருந்தது.

இவ் போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என 100க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.