வவுனியாவில் தந்தை செல்வாவின் 124ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு!!

850

தந்தை செல்வாவின் 124ஆவது ஜனன தினம்..

வவுனியா பிரதான மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று (31.03.2022) காலை 9 மணியளவில் நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா தலைமையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகத்தின் 124 ஆவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது தமிழரசுக்கட்சி வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் தந்தை செல்வநாயகத்தின் பெருமைகள் மற்றும் அவர் முன்னெடுத்த சேவைகள் தொடர்பில் நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா உரை நிகழ்த்தியதுடன் நிகழ்வு நிறைவடைந்ததது.