வவுனியா செட்டிகுளத்தில் இளைஞர் குழு வீடு புகுந்து தாக்குதல் : ஒருவர் படுகாயம்!!

1450

செட்டிகுளத்தில்..

செட்டிகுளம், அரசடிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (31.03) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இளைஞர் ஒருவர் வெளியில் சென்று வீட்டுக்கு திரும்பிய நேரத்தில் அங்கு வந்த இளைஞர் குழு ஒன்று குறித்த இளைஞர் மீது தாக்குதலை மேற் கொண்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

காயமடைநட்த இளைஞர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு உறவினர்களால் அனுப்பி வைக்கப்பட்டதுடன், செட்டிகுளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.