வவுனியா மாவட்டம் ஊரடங்கு சட்டத்தால் முழுமையாக முடங்கியது : பொலிசார் தீவிர கண்காணிப்பு!!

1368

ஊரடங்கு சட்டம்..

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக வவுனியா நகரம் முழுமையாக முடங்கியுள்ளதுடன், பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்தினால் நாடு முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வியாபார நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், வீதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

பொலிசார், இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், வீதியால் செல்லும் வாகனங்கள், மோட்டர் சைக்கிள்களை வழிமறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொள்வதுடன் அனுமதியின்றியும், அத்தியாவசிய தேவையின்றியும் பயணிப்பவர்களை எச்சரித்து பொலிசார் மீள அனுப்பி வருகின்றனர்.