தாய் – மகன் மர்மமாக கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

832

திண்டுக்கல்..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு குருக்களையன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்.

இவருக்கு சுபஹரினி என்ற மனைவியும், தன்வந்த் என்ற 4 வயது மகனும் உள்ளனர் இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் காவலுக்காக தனது தாய் சௌந்தரம்மாளுடன் உறங்கி கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு அந்த பகுதிக்கு வந்த மர்ம கும்பல் ஒன்று தாய் – மகன் இருவரையும் அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது.

இதுகுறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் செல்வராஜின் மனைவி சுபஹரியின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது அவரிடம் போலீசார் தங்களது பானியில் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

செல்வராஜும் அவரது உறவினரான ஒத்தபட்டியை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். கோபிகிருஷ்ணன் சுபஹரணியுடன் நட்புடன் பழகியுள்ளார்.

தம்பி முறை உறவினரான கோபி கிருஷ்ணனுக்கும் சுபஹரிணிக்கும் நட்பு கள்ளக் காதலாக மாறியது. இதனை அறிந்த செல்வராஜ் அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார்.

ஆத்திரமடைந்த கோபிகிருஷ்ணன் தனது நண்பர்களான ஆனந்த் மற்றும் வடமதுரை அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுடன் சேர்ந்து செல்வராஜ் மற்றும் அவரது தாய் சௌந்தரம்மாளை வெட்டி கொலை செய்ய திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் போலீஸ் தன்னை கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் கோபிகிருஷ்ணன், போலீஸ் விசாரணை நடத்தும்போது கூட்டத்தில் நின்று போலீசாரை நோட்டமிட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து கோபிகிருஷ்ணன், சுபஹரினி ஆகிய இருவரையும் உடனடியாக போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தபட்ட 3 பேரையும் 5 தனி படை அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று இரவு அவர்கள் மூவரையும் பழனியில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இரண்டு மாணவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் மற்ற மூவரை கிளை சிறையிலும் அடைத்தனர்.