வவுனியாவில் இரகசிய தகவலையடுத்து இளைஞர்கள் இருவர் கைது!!

2350

இளைஞர்கள் இருவர் கைது..

வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்று (05.04.2022) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா, குருமன்காடு பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மணிபுரம் பகுதியைச் சேர்ந்த 31 வயது மற்றும் 21 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.