அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் கதவை திறக்கமுயன்ற பயணியால் பரபரப்பு!!

290

Flight

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருந்து சிகாகோ – சர்கரமென்டோவுக்கு பயணிகள் மற்றும், விமான ஊழியர்கள் உட்பட 139 பேருடன் பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரெனவிமானத்தின் கதவை திறக்க முயன்றார். அதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் திறக்கவிடாமல் தடுத்து உள்ளே இழுத்தனர்.

இதனையடுத்து ஓமேகா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டு அந்த பயணி வெளியேற்றப்பட்டார். பின்னர் விமானம் புறப்பட்டு சென்றது. ஒருவேளை விமானத்தின் கதவை அவர் திறந்திருந்தால், பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.