வவுனியாவில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு களைகட்டிய வியாபாரம்!!

1685

புத்தாண்டை முன்னிட்டு..

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளது.

தமிழ் – சிங்கள புதுவருடம் நாளை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வவுனியா நகருக்கு வருகை தரும் மக்கள் மழைக்கு மத்தியிலும் புத்தாடைகள், இனிப்பு பொருட்கள், பட்டாசுகள் என்பவற்றையும் மரக்கறிகளையும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இதனால் வவுனியா நகரம் சனச்செரிசல் மிக்கதாக காணப்படுவதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளில் பொலிசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.