திருமணமான 15 நாளில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்!!

608

திண்டுக்கல்..

இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணமான 15 நாட்களில் புதுமாப்பிள்ளை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் அனுமந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கும் தென்றல் என்ற பெண்ணுக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணமானது.

இந்த நிலையில் நேற்று இரவு நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஏர்போர்ட் நகர் பகுதிக்கு பிரபாகரன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த மர்ம கும்பல், பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்களை வழி மறித்தது.

பின்பு பிரபாகரனை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. தடுக்க வந்த அவரது நண்பர்கள் இருவரையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், மூன்று போரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரபாகரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.