மரண அறிவித்தல் : அன்ரன் சமரக்கோன் மேரி மெற்டில்டா பேளி

8592


அமரர் அன்ரன் சமரக்கோன் மேரி மெற்டில்டா பேளி



யாழ்ப்பாணம் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் மன்னார் சிறிய குருமடவீதி சாவற்காட்டினை வசிப்பீடமாகவும் கொண்ட அமரர் திருமதி அன்ரன் சமரக்கோன் மேரி மெற்டில்டா பேளி அவர்கள் 21.04.2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆழ்வார்பிள்ளை பொன்னுந்துறை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், யாழ்ப்பாணம் புலோலியை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை எலிசபெத் இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் அமார் திருமதி.அன்ரன் சமரக்கோன் அவர்களின் அன்பு மனைவியாரும்,



கலாநிதி அன்று அனஸ்லி (Managing Director – New Bright Education Center & IDL Education Center, BCS International .PVT.LTD And Regional Director – IDM Nations Campus) , திரு.ஜெனேவல் ஜோன்ஸிலி , திருமதி.சயானா சியாமிலி , திரு.பிறின்ஸ் பிறேம்ஸிலி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.



அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (சிறிய குருமட வீதி,
சாவற்காடு,மன்னார்) நடைபெற்று நல்லடக்கத்திற்காக மன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் : குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு
திரு. அன்று அனஸ்லி (மகன்) – 94 773111245
IDM Nations Campus – 94 760970955