வவுனியாவில் பட்டப்பகலில் வர்த்தக நிலையத்திற்கு புகுந்து சங்கிலி அறுப்பு!!

2909

சங்கிலி அறுப்பு..

வவுனியாவில் பட்டப்பகலில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து சங்கிலி ஒன்று அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, யாழ் வீதியில் புதிய பேரூந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள வர்த்தக நிலைவயத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர் அங்கு நின்ற பெண்ணை அழைத்து வர்த்தக நிலையத்திற்குள் வைத்து ஒருவருடைய முகவரியை விசாரிப்பது போல் விசாரித்துக் கொண்டிருந்த போது,

குறித்த பெண் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடி வீதியில் குறித்த இளைஞருடன் கூட வந்தவர் தயார் நிலையில் வைத்திருந்த மோட்டர் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.