வவுனியாவில் வெறிச்சோடிய பாடசாலைகள்!!

795

வெறிச்சோடிய பாடசாலைகள்..

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகக் கோரி ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் மாணவர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைகள் பல வெறிச் சோடிக் காணாப்படுகின்ளறன.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாடாளாவிய ரீதியில் 1000 இற்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இணைந்து இன்று (28.04) தொழிற் சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

இதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்டத்திலும் அதிபர், ஆசிரியர்கள் பலரும் பாடசாலைக்கு சமூகமளிக்காததுடன், மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை. இதன் காரணமாக பாடசாலைகள் வெறிச் சோடிக் காணப்படுகின்றன.

இருப்பினும் சில பாடசாலைகளில் இம்முறை கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மணவர்கள் சென்றமையையும், ஒரு சில ஆசிரியர்கள் சமூகமளித்திருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.