வவுனியா நகரில் மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்!!

1758

வரிசையில் காத்திருக்கும் மக்கள்..

நாட்டின் பல மாவட்டங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கான தட்டுப்பாடு தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் இவற்றிக்காக இன்றும் மக்கள் நீண்ட மணிநேரமாக வரிசையில் காத்திருந்தனர்.

வவுனியா மாவட்டத்தின் பல எரிபொருள் நிலையங்களில் மண்ணெண்ணெய் நிறைவடைந்துள்ள போதிலும் மாவட்டத்தின் இரு எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்களில் ஒரு நபருக்கு 500 ரூபாவிற்கு என்ற அடிப்படையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகின்றன. இதனையடுத்து மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

மேலும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே வழங்கப்படுவதுடன் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிவாயு முகவரினால் இன்று 70 டோக்கன்கள் வழங்கப்பட்டு அதிகாலை 4.30மணி தொடக்கம் மக்கள் காத்திருந்து காலை 11.00 மணியளவில் எரிவாயுவினை பெற்றிருந்தனர்.

அத்துடன் கடும் வெயிலுக்கு மத்தியில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் வங்கியினால் இலவசமாக தண்ணீர் போத்தல்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.