வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம்!!

855


ஊடகவியலாளர் சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம்..



வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (28.04.2022) மாலை 5.30 மணியளவில் மாமனிதர் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் ஊடக அமையத்தின் தலைவர் எம்.ஜி.ரெட்ணனாந்தன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.



அமையத்தின் செயலாளர் என்.ஜனகதீபன் முதற்சுடரீனை ஏற்றி மலர் வணக்கத்தினை ஆரம்பித்து வைத்ததுடன் ஏனைய ஊடகவியாளர்களும் மெழுதிரி ஏற்றி மலர் வணக்கத்தினை செலுத்தியிருந்தனர்.




இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு தினமாகும். பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005 ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில் பாராளுமன்றத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.


இலங்கையில் நிலவும் கொடூரமான ஊடக – கருத்துச் சுதந்திர மறுப்பு சூழலை காட்டும் சிவாரமின் படுகொலை நடந்து பல வருடங்கள் கடந்தபோதும் இதுவரையில் நிமலராஜன் முதல் சிவராம் உட்பட அவரின் பின்பும் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு பொறுப்பான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1959 ஆகஸ்ட் 11 மட்டக்களப்பில் பிறந்த சிவராம் தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989 இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவலாக வாசிக்கப்பட்டன. பத்திரிகை எழுத்தாளராக அரசியல் ஆய்வாளராக படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களை கொண்டிருந்ததுடன்,


தமிழ் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிவந்த சிவராம் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்ப்புக்களையும் கடந்தே எழுதிவந்த அவர் இறுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதே தினத்தில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு 17 வருடங்களாகியும் சிவராமின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி நிலை நாட்டப்படவில்லை என்பது குறிப்பிடப்பட்டது.