வவுனியாவில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழுமையான கதவடைப்புப் போராட்டம்!!

1315

கதவடைப்புப் போராட்டம்..

அரசாங்கத்திற்கு எதிராக வவுனியாவில் இன்று (06.05) பூரண கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களை வதைக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்னும் தொனிப் பொருளில் 2000 இற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்களால் நாடு பூராகவும் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் உள்ள வர்த்தக நிலையங்கள், மொத்த மரக்கறி விற்பனையகம், தபாலகம், வங்கிகள், அனைத்தும் மூடப்பட்டு மக்கள் அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், தனியார் பேரூந்து சேவை, முச்சக்கர வண்டிகள் என்பனவும் சேவையில் ஈடுபடாமையால் போக்குவரத்து சேவையும் பாதிப்படைந்துள்ளது. இருப்பினும் வீதிகளில் மக்களின் நடமாட்டத்தை குறைந்தளவில் அவதானிக்க முடிகிறது.