வவுனியாவில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க பொலிசார் விசேட நடவடிக்கை!!

1375


பொலிசார் விசேட நடவடிக்கை..



வவுனியாவில் மக்கள் ஒன்று கூடுவதை தவிப்பதற்காக பொலிசார் விசேட நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.



நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டடம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவசர கால சட்டமும் நடைமுறையில் உள்ளது.




இந்நிலையில் மக்கள் ஒன்று கூடி போராட்டங்களை மேற்கொள்வதை தடுக்கும் வகையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையில் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் வவுனியா நகரப் பகுதி மற்றும் பிரதான வீதிகளில் பொலிசாரால் திடீரென வீதியால் செல்பவர்கள் வழிமறிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படுவதுடன் தேவையற்ற விதமாக நடமாடுபவர்கள் எச்சரிக்கப்பட்டு மீண்டும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வவுனியாவில் மதியத்திற்கு பின்னர் மக்கள் நடமாட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளது.