நாளை தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்!!

2046

ஊரடங்கு சட்டம்..

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (13.05.2022) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. அதேசயம் நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் (14.05.2022) சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை 6வது முறையாக ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக ஜனாதிபதி கோட்டபாயவால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.