வவுனியாவில் ஊரடங்கு தளர்வு நேரத்தில் அதிகரித்த மக்கள் நடமாட்டம்!!

1834

ஊரடங்கு தளர்வு நேரத்தில்..

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊடரங்கு சட்டம் இன்று (13.05) காலை நீக்கப்பட்டமையினையடுத்து வவுனியா நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்த நிலையில் காணப்பட்டது.

அத்தியாவசிய பொருட்கள், மருந்துப் பொருட்கள், மரக்கறிகள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காகவும் வங்கிகளில் பணம் பெறுவதற்காகவும் அதிகளவிலான மக்கள் நகரிருக்கு வருகை தந்துள்ளதுடன் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தபட்டுள்ளதுடன்,

வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் வீட்டிற்கு செல்லும் பாதையின் இரு பகுதிகளிலும் இராணுவத்தினர் பொலிஸார் இணைந்த சோதனை சாவடி அமைக்கப்பட்டு சந்தேகத்திடமாக செல்பவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர்.