தமிழீழம் மலரும் என யாழில் துண்டுப் பிரசுரம் ஒட்டியவர் கைது!!

310

A1யாழ். இந்து கல்லூரிக்கு அருகில் அநாமதேய துண்டுப் பிரசுரத்தினை ஒட்டிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24) என்ற இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு அவ்விடத்தில் தமிழீழம் மலரும் என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரத்தினை ஓட்டினார் என்ற குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மேற்படி இளைஞன் ஒட்டிய துண்டுப்பிரசுரமும் அங்கிருந்த அகற்றப்பட்டுள்ளதுடன், இளைஞன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.