காணாமல்போன நான்காவது கிளியும் கண்டுபிடிக்கப்பட்டது!!

344

PArrot

ஜனாதிபதி மாளிகையில் இருந்து பறந்து சென்ற நான்கு வர்ணக் கிளிகளுள் மூன்று நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் நான்காவது கிளியும் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸாரால் இந்த வர்ணக் கிளி ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை பகுதி வீடொன்றின் கூட்டுக்குள் குறித்த கிளி சென்றுள்ளது. இதனை அடுத்து வீட்டார் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து கிளியை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.