வவுனியாவில் திருடிய மோட்டர் சைக்கிளுடன் இளைஞன் கைது!!

1682

இளைஞன் கைது..

வவுனியாவில் கடந்த மார்ச் மாதம் பஜார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் ஒன்று திருடிச்செல்லப்பட்டிருந்தது திருடிச்செல்லப்பட்ட மோட்டர் சைக்கிள் தொடர்பாாக விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் ஒரு இளைஞனை கைது செய்துள்ளதுடன் திருடிச்சென்ற மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.

வவுனியாவில் கடந்த மார்ச் மாதம் பஜார் வீதியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்க (37348), டிலீபன் (61461), உபாலி (60945) பொலிஸ் கான்ஸ்டபிள்களான , தயாளன் (91792), திசாநாயக்கா (18219) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது நொச்சியாகம பகுதியில் மறைத்து வைத்திருந்த மோட்டார் சைக்கிளும் திருட்டுடன் தொடர்புபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார் . மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞனை நாளை நீதிமன்றில் முற்படுத்த வவுனியா பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.