வவுனியாவில் எரிபொருளுக்காக 2 கிலோமீற்றர் தூரத்திற்கு மேல் காத்திருந்த மக்கள்!!

1287

எரிபொருளுக்காக..

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்றில் மாத்திரமே தற்போது பெற்றோலை பெற்றுக்கொள்ளகூடிய நிலை காணப்படுவதனால் 800க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

வவுனியா 4ம் கட்டை எரிபொருள் நிலையத்திற்கு இன்று (21.05.2022) அதிகாலை 6600 லீற்றர் பெற்றோல் கொள்வனவு மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக பெற்றோலை பெற்றுக்கொள்வதற்கு குறித்த எரிபொருள் நிலையத்திற்கு அருகே 2 கிலோமீற்றர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.

மோட்டார் சைக்கில் 1000ரூபா, முச்சக்கரவண்டி 2000ரூபா , கார் மற்றும் வான் வாகனங்கள் 5000 ரூபா என்ற அடிப்படையிலேயே பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் கொள்கலன்களில் எரிபொருள் வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

குறித்த எரிபொருள் நிலையத்தில் மக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.