வவுனியாவில் பொன்னையா அறக்கட்டளை ஆரம்பமும் உதவித்திட்டமும் வழங்கலும்!!

1225

பொன்னையா அறக்கட்டளை..

அமரர் திரு.மு.பொன்னையா அவர்களின் நினைவாக வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் பொன்னையா அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக அவுஸ்ரேலியாவில் வசிக்கும் திரு. க.குவேந்திரன் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு அவர்களது நிதி உதவியுடன் வவுனியா கற்பகபுரம் கிராமசேவையாளர் அலுவலகத்தில் கற்பகபுரம், பாரதிபுரம் பகுதிகளை சேர்ந்த 40 மாணவர்களுக்கு ஒருவருக்கு 1000/= பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் காலத்தின் தேவையினை கருத்தில் கொண்டு மரம் நடுகையை ஊக்குவிக்கும் பொருட்டு கற்பகபுரம் கிராமத்தில் 100 தேக்கங்கன்றுகள் நடும் நிகழ்வும் இடம் பெற்றிருந்தது.