வவுனியாவில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18ஆவது ஞாபகார்த்த தினம்!!

617

நடேசனின் 18ஆவது ஞாபகார்த்த தினம்..

மட்டக்களப்பில் கடந்த 2004 ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 வது ஞாபகார்த்த தினம் வவுனியா ஊடக அமையத்தில் இன்று (31.05) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

ஊடக அமையத்தின் தலைவர் பரமேஸ்வரன் கார்த்திபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு ஒரு நிமிட அக வணக்கத்துடன் ஆரம்பமாகி ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் திருவுருவ படத்திற்கு ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன் தொடர்ந்து மெழுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.