திருமணமான 4 மாதத்தில் இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்!!

780

சென்னையில்..

சென்னையில் குழந்தை பிறக்காது என மன உளைச்சலில் இருந்த இளம் தம்பதியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (22). இவருக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. இருவரும் சென்னை மதுரவாயலை அடுத்த தனலட்சுமி நகரில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் உறவினர்கள் செல்போனில் அழைத்தபோது இருவரும் எடுக்கவில்லை. மேலும் வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்காமல் இருந்துள்ளது. கதவை தட்டியும் யாரும் திறக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சக்திவேலின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளனர்.

அவர்களது உடல்களை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் தற்கொலைக்கு முன்னர் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.

அதில், ‘எனது ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால் என்னால் குழந்தை பெற இயலாத காரணத்தால் நாங்களே எங்கள் சாவை தேடிக்கொள்கிறோம். இதில் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், தம்பதியரின் தற்கொலை குறித்து கூறும்போது, தம்பதியர் மருத்துவமனையை ஏதும் அணுகாமல் இருந்து வந்துள்ளனர் என்றும், தங்களுக்கு குழந்தை பிறக்காது என தாங்களே முடிவு செய்து மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டனர் என்றும் தெரிவித்துள்ளனர்.