வவுனியாவில் பெற்றோலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்!!

2166


நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்..



வவுனியா மாவட்டத்திலுள்ள பெரும்பாலான எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்களில் இன்று (07.06.2022) மதியம் தொடக்கம் பெற்றோலுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.



இன்று நள்ளிரவு முதல் ஒக்ரோன் 92 ரக பெற்றோல் 750 ரூபாவாகவும் ஒக்ரோன் 95 ரக பெற்றோல் 765 ரூபாவாகவும் ஒட்டோ டீசல் 455 ரூபாவாகவும் சூப்பர் டீசல் 498 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன (போலிச் செய்தி).




இதனையடுத்து வவுனியாவிலுள்ள பெரும்பாலான எரிபொருள் மீள்நிரப்பு நிலையங்களில் முச்சக்கரவண்டி , மோட்டார் சைக்கில்கள் என்பன நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.


இரண்டு நாட்களாக மாவட்டத்தின் பல எரிபொருள் மீள்நிரப்பு நிலையங்களில் டீசலுக்கான வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுகின்ற போதிலும் டீசல் இதுவரையும் கிடைக்கப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.