பொதுமக்களுக்கு லிட்ரோ நிறுவனம் வழங்கும் விசேட அறிவிப்பு!!

1505

விசேட அறிவிப்பு..

உள்நாட்டு எரிவாயு விநியோகம் நாளைய தினமும் முன்னெடுக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ நிறையுடைய லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் நாளை விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் இன்றைய தினம் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டது. பல நாட்களாக சந்தையில் எரிவாயு இன்மையால் பொதுமக்கள் வரிசையில் நின்று எரிவாயுவினைப் பெற்றுக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் எதிர்வரும் சில நாட்களில் மீண்டும் எரிவாயு விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.