வவுனியாவில் எரிவாயு இல்லை : மண்ணெண்ணெய் அடுப்புக்கு மாறியவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம்!!

1337


வவுனியாவில் எரிவாயு இல்லை..



வவுனியா மாவட்டத்தில் சீரான முறையில் மண்ணெண்ணெய் கிடைக்கப்பெறாமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.



வவுனியாவிலுள்ள எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய்க்காகக் கடந்த ஒரு வார காலமாக விவசாயிகள், கடற்தொழிலாளர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் பல மணிநேரம் காத்திருந்தும் மண்ணெண்ணெய் கிடைக்கப்பெறாது ஏமாற்றத்துடனே வீடு திரும்பியிருந்தனர்.




தோட்டம் மற்றும் விவசாய நடவடிக்கைகளின் போது நீர் பாய்ச்சும் மோட்டரை இயக்குவதற்கும், குளத்தில் கடற்தொழிலில் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தங்களின் படகு மற்றும் வள்ளத்திற்கு எரிபொருள் இன்மையுடன் வீட்டில் சமையல் நடவடிக்கைக்கு அடுப்பிற்கு மண்ணெண்ணெய் இன்மை என இவ்வாறு பலர் பாதிப்படைந்துள்ளனர்.


எரிவாயுவிற்குத் தட்டுப்பாடு நிலவியதையடுத்து மண்ணெண்ணெய் அடுப்பிற்கு மாறிய பல குடும்பப் பெண்கள் மண்ணெண்ணெய்யும் இன்றி சமையலை மேற்கொள்ளாத நிலைமை உருவாகியுள்ளது.

கிராமப்புற பகுதிகளில் மக்கள் விறகுக்கு மாறியுள்ள போதிலும் நகரப்புற மக்கள் அதற்கு தங்களை மாற்றியமைக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.


எனவே எமது மாவட்ட அதிகாரிகள் உரிய தரப்பினரிடம் கலந்துரையாடி மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயுவினை பெற்றுத்தருமாறு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.