வவுனியா நகரில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

2827

சடலம் மீட்பு..

வவுனியா, பசார் வீதியில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (11.06) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பசார் வீதியில் உள்ள கடைத் தொகுதி அமைந்துள்ள பகுதியில் நகைக்கடை ஒன்றின் முன்பாக ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனை அவதானித்தவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தந்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட ஆணின் தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அடி காயங்கள் காணப்படுகின்றன. சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலரிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா நகரப் பகுதியில் நாட்டாண்மை தொழில் புரிபவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.