வவுனியா பஜார் வீதியில் ஒருவர் அடித்து கொலை : சந்தேகநபர் கைது – சிசிரிவி காணொளி!!

5418


பஜார் வீதியில்..



வவுனியாவில் இடம்பெற்றுள்ள கொலைச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.



வவுனியா பஜார் வீதியில் உள்ள கடைத் தொகுதி அமைந்துள்ள பகுதியில் நகைக்கடை ஒன்றின் முன்பாக நேற்று (11.06.2022) இரவு 10.20 மணியளவில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.




சடலமாக மீட்கப்பட்ட ஆணின் தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அடிகாயங்கள் காணப்படுவதுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.


இதன் போது அருகேயுள்ள வர்த்தக நிலையங்களில் சிசிரிவி காணொளியினை பொலிஸார் பார்வையிட்ட சமயத்தில் குறித்த நபரை பிரிதொரு நபர் தடியால் தாக்குதல் மேற்கொண்ட காட்சிகள் காணப்பட்டன.

அதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் சந்தேகநபர் வைக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா நகரப் பகுதியில் நாட்டாண்மை தொழில் புரிபவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.