வவுனியாவில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: நீதவான் நேரில் விசாரணை!!

3683

பசார் வீதியில்..

வவுனியா, பசார் வீதியில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பசார் வீதியில் உள்ள கடைத் தொகுதி அமைந்துள்ள பகுதியில் நகைக்கடை ஒன்றின் முன்பாக ஆண் ஒருவர் நேற்று (11.06) இரவு அடி காயங்களுடன் இறந்த நிலையில் காணப்பட்டார்.

இதனை அவதானித்தவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வவுனியா பொலிசார் வருகை தந்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட ஆணின் தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அடி காயங்கள் காணப்பட்டன. இதனையடுத்து குறித்த பகுதிக்கு இன்று (12.06) காலை வருகை தந்த பதில் நீதவான் தி.திருவருள் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்வதற்கும் உத்தரவிட்டார்.

சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா நகரப் பகுதியில் நாட்டாண்மை தொழில் புரிபவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார்,

சீசிரீவி காணொளி உதவியுடன் கொலை சம்பவம் தொர்பில் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.