மகனின் சடலத்தை 5 நாட்கள் ஐஸ் கட்டியில் வைத்திருந்த தாய் கைது!!

288

Body

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனின் சடலத்தை 5 நாட்கள் வரை ஐஸ் கட்டியில் வைத்திருந்ததற்காக கொலை குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

டெக்சாஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பல்லவி தவான் தனது 10 வயது மகன் அர்னவ்வை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க பல்லவி எழுத்து மூலமான வாக்குமூலத்தை பொலிசாருக்கு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த ஜனவரி 29ம் திகதி பள்ளிக்கு அனுப்ப அர்னவை எழுப்பினேன்.

ஆனால் அவன் அசைவற்று கிடந்தான். பள்ளிக்கு செல்லாமல் இருக்க அவன் நடிப்பதாகவே நினைத்தேன். பின்னர் அவனை குளிப்பாட்ட எழுப்பிய போதுதான் அவன் இறந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக அவனது இதயத்துடிப்பை பரிசோதித்து அவனுக்கு செயற்கை சுவாசம் அளிக்க முயற்சி செய்தேன். ஆனால் அவன் உணர்ச்சியற்று கிடந்தான்.

அதன்பிறகு, அவனது பள்ளிக்கு போன் செய்து அர்னவ் இனிமேல் பள்ளிக்கு வரமாட்டான் என்று தெரிவித்தேன். அவர்கள் காரணம் கேட்டபோது நான் எதுவும் கூறவில்லை.

மேலும், எனது கணவர் வேலைக்கு சென்றிருந்ததால் அவர் ஊருக்கு திரும்பி வரும் வரை எனது மகனின் சடலத்தை, ஃபிரிட்ஜில் இருந்த ஐஸ் கட்டிகளை பொலித்தீன் கவர்களில் நிரப்பி குளியல் தொட்டிக்குள் வைத்து சடலத்தை அதன் மீது வைத்தேன்.

பின்பு எனது கணவர் வந்ததும் அவரிடம் மகனின் மரணத்தை தெரிவிப்பதற்காக சென்றபோது அவர் வாசலில் பொலிசாருடன் பேசிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

அங்கு என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை இதையடுத்து பொலிசார் என்னை கைது செய்தனர்.

மேலும், இந்து மதச்சடங்குகளின் படி அடக்கம் செய்வதற்காகவே எனது மகனை அவ்வாறு ஐஸ் கட்டியில் வைத்திருந்தேன். நான் அவனை மிகவும் நேசித்தேன், அவனை கொலை செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

எனினும், சடலத்தை பரிசோதனை செய்த மருத்துவ நிபுணர்கள் இந்த மரணம் திட்டமிட்டதல்ல என்றும், இயற்கையான மரணமாகவே இருந்திருக்க கூடும் எனவும் அறிக்கை அளித்துள்ளனர்.