6 கைதிகள் விடுதலை..
பொசன் போயாவை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து 6 பேர் இன்று (14.06) விடுவிக்கப்பட்டனர்.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில் 173 கைதிகள் நாடு பூராகவும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், சிறு குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் அபராதம் செலுத்தாது சிறைச் தண்டனை பெற்று வந்த கைதிகள் 6 பேர் வவுனியா சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.