வவுனியாவில் பெற்றோலுக்காக 7 கிலோ மீற்றர் தூரத்திற்கு 1500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில்!!

3977

பெற்றோலுக்காக..

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்றில் மாத்திரமே தற்போது பெற்றோலை பெற்றுக்கொள்ள கூடிய நிலை காணப்படுவதனால் 1500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

வவுனியா இறம்பைக்குளம் எரிபொருள் நிலையத்திற்கு இன்று (16.06.2022) அதிகாலை 6600 லீற்றர் பெற்றோல் கொள்வனவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக பெற்றோலை பெற்றுக்கொள்வதற்கு குறித்த எரிபொருள் நிலையத்திற்கு அருகே 7 கிலோமீற்றர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்தனர்.

மோட்டார் சைக்கில் 2000ரூபா, முச்சக்கரவண்டி 3000ரூபா , கார் மற்றும் வான் 8000ரூபா என்ற அடிப்படையிலேயே பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் கொள்கலன்களில் எரிபொருள் வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

வவுனியா இறம்பைக்குளம் எரிபொருள் நிலையத்திலிருந்து ஹொரவப் பொத்தானை வீதியூடாக வவுனியா நகர் வரை 2 கிலோமீற்றர் தூரத்திற்கும் குறித்த எரிபொருள் நிலையத்திலிருந்து வெளிக்குளம் பொது மயானம் வரையான வீதியில் 3 கிலோமீற்றர் தூரத்திற்கும் குறித்த எரிபொருள் நிலையத்திலிருந்து கோவிற்குளம் சிவன் கோவில் வரையான வீதியில் 2 கிலோமீற்றர் தூரத்திற்கு என 7 கிலோமீற்றர் தூரத்திற்கு வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

குறித்த எரிபொருள் நிலையத்தில் மக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டமையுடன் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த இடத்திற்கு வருகைதந்து வரிசைகளை கட்டுப்படுத்தியதுடன் வரிசைகளை கட்டுப்பாட்டுப்பாட்டுக்குள் வைக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்தலும் வழங்கியிருந்தார்.