வவுனியா மாவட்ட செயலக வளாகத்திலுள் சென்ற 20க்கு மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் : எரிபொருள் வழங்குமாறு கோரிக்கை!!

1305

வவுனியா மாவட்ட செயலக வளாகத்திலுள்..

வவுனியா மாவட்ட செயலக வளாகத்தினுள் இன்று (23.06.2022) காலை முச்ச்க்கரவண்டிகளுடன் சாரதிகள் சென்று தமக்கு 4 தினங்களுக்கு ஒரு முறை 3500ரூபாவிற்கு பெற்றோலை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

மாவட்டத்தில் எரிபொருளுக்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மாவட்ட மற்றும் பிரதேச செயலகத்தினர், இராணுவம், பொலிஸார் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் வாரத்திற்கு ஒரு தடவை (7நாட்களுக்கு ஒரு முறை) எனும் ஒழுங்கமைப்பில்,

நிகழ்நிலையில் (ஒன்லைனின்) வாகன இலக்கங்களை பதிவு மேற்கொண்டு கார் மற்றும் இதர வாகனங்களுக்கு 3000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 2000 ரூபாவிற்கும் , மோட்டார் சைக்கில்களுக்கு 1500 ரூபா என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது.

எனினும் முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் 2000 ரூபா பெற்றோலின் இரண்டு தினங்களுக்கு மாத்திரமே எம்மால் வாகனத்தினை செலுத்தக்கூடிய வகையில் உள்ளது இதனால் எமது வாழ்வாதாரம் முற்றகாக பாதிப்படைந்துள்ளதுடன் எமது குடும்பத்தினரும் சாப்பாட்டிற்கு கஸ்டப்படும் நிலமை உறுவாகியுள்ளது.

எனவே எமது எரிபொருள் பெறுமதியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு 4 நாட்களுக்கு ஒரு தடவை 3500 ரூபாவிற்கு எரிபொருள் என்ற அடிப்படையில் வழங்குமாறு தெரிவித்து மாவட்ட செயலக வளாகத்தில் தமது முச்சக்கரவண்டிகளை நிறுத்தியிருந்தனர்.

அதனையடுத்து அங்கு வந்திருந்தவர்களை அழைத்து மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் கலந்துரையாடியதுடன் பெற்றோல் வழங்குவதில் தற்போது பாரிய சிக்கல்களை மாவட்ட செயலகம் எதிர்நோக்கியுள்ளதுடன்,

விரைவில் சிறந்தபொறிமுறை மூலம் அனைத்து தரப்பினருக்கும் எரிபொருள் வழங்கப்படும் என தெரிவித்தனர். அதனையடுத்து மாவட்ட செயலகத்தில் தரிந்து நின்ற 20க்கு மேற்பட்ட முச்சக்கரவண்டிகளும் அவ்விடத்திலிருந்து சென்றன.